அத் தேசமெங்கும் அவைதானே
திரும்பும்
திசையிலே அவைதானே
வாசம் வான்வரை அவைதானே
பச்சைத்
தங்கத் திரு நாடே
பச்சை பச்சை பசும் பச்சை
இச்சை இழைத்திடும் அதன் பச்சை
மலையக மண்ணின் மாயம் என்ன
மலைகளில்
தங்கம் பசும் பச்சை
தேயிலையென்ற
பெயரெதற்கு
தேன்மலையென்ற
பெயர் பொருத்து
வான்வரை
மரங்கள் வளர்ந்திருக்கு
வான தேவதைகள் வருவதற்கு
விபத்துக்கள்
அங்கு அதிகம் என்பேன்
முகில்
மகள் மலையில் மோதக்கண்டேன்
மலையும்
மழையும் கலவி கொண்டு
தவழும்
மழலை அருவி கண்டேன்
கரைந்திட
செம்மண் நீரினுடன்
வியர்வையில்
குங்குமம் தேவதையின்
களைந்ததோ
கன்னியின் ஆடைகளே
வளைந்திட்ட
சாலையின் நளினங்களே
இதுதான்
இதுதான் பசுந்தேசம்
பச்சைத்
தங்கத்தின் விளைதேசம்
பருவக்
கன்னி மலை மகளின்
பதுமை அழகின் புகழ் தேசம்
No comments:
Post a Comment