கண்ணிமையால்
சிறைப் பிடிப்பேன் - உன்னை
கவிதைகளால்
கடத்திச் செல்வேன்
காற்றலையால்
வீடமைப்பேன் - அங்கே
கார் முகிலால் போர்வை செய்வேன்
கதிரோனுக்கு
அழைப்பு வைப்பேன் - உன்
கண்கள்
காண விழா அரங்கு வைப்பேன்
வீசும்
உன் விழி வெளிச்சம் கண்டு
- அவன்
வியர்வை
சிந்தவே கால் நனைப்பேன்
குறுநகையைப்
பதிவு செய்வேன் - அதை
குரல் தீண்டாப் பாடல் என்பேன்
கூந்தல்
முடி நடனம் காண - சிவனின்
கங்கை நதியைக் காக்க வைப்பேன்
இத்தனையும்
வடிவம் ஏற்க - காதல்
அகத்தியனாய்த் தவமிருப்பேன்
சம்மதத்தை
மௌனம் கொன்றால் - கணமே
அதிஷ்ட்டம்
மீது போர் தொடுப்பேன்!!!!
குறுநகையைப் பதிவு செய்வேன் - அதை
ReplyDeleteகுரல் தீண்டாப் பாடல் என்பேன்
கூந்தல் முடி நடனம் காண - சிவனின்
கங்கை நதியைக் காக்க வைப்பேன்
semaya irukku
நன்றி
Delete