நெஞ்சத்தில்
மஞ்சம் தரவா - அதில்
அஞ்சுகமே
தஞ்சம் தரவா
நெஞ்சத்தை
இலஞ்சம் தரவா - காதல்
பஞ்சத்தை
நஞ்சம் இட வா
கொஞ்சம்
கவி கொஞ்சித் தரவா - நீ
கெஞ்சும்
படி மிஞ்சித் தரவா
பிஞ்சுக்
கனி அஞ்சித் தொடவா - அதில்
எஞ்சும்
இடம் வஞ்சித்திடவா
பிஞ்சுக்
கனி அஞ்சித் தொடவா - என்
வஞ்சிக்கு
நான் வாஞ்சை தரவா.........
No comments:
Post a Comment