விதையொண்டு
முழைச்சதம்மா - அது
விதம் விதமா தழைச்சதம்மா
விந்தொண்டு
தந்த சாபம் - என்ன
வீண் கருவா விதச்சதம்மா
கறுப்பான
பேழைக்குள்ள - அது
என் உசிர அடைச்சதம்மா
கருவறையாம்
அதுவென்று - தொப்புள்
காத்த கொடி சொன்னதம்மா
சிரிப்போடு
அவள் இருக்க - அன்று
சிலிர்ப்போடு
நான் முழைச்சேன்
சலிப்போடு
அவள் இருக்கா - என்ன
அழிப்பேன்ணு
சபதம் வைக்கா
இன்பத்தத்
தான் எடுத்து - என்ன
ஈனமென ஏன் நினைக்கா
அன்பத்தான்
நான் கேக்கன் - ஏந்தான்
ஆத்திரத்தில்
அழுது நி(ற்)க்கா
கருவறையில்
நான் இருந்து - இப்ப
அழுங்குரலு
கேக்கலையோ
அழுங்குரலக்
கேட்டிருந்தா - உனக்கு
அழுக நிக்கும் நினைக்கலையோ
கருக்கலைப்பு
செய்வேன்ணு - நீ
கலங்காம
சொல்லுறியே
உருவொண்டு
வரும் முன்னே - என்ன
சொல்லால
கொல்லுறியே
தேவையா
இந்தக் கருவென்று - அப்போ
உன் தாயும்
நெனைச்சிருந்தா
இங்க தேவதையா நீ எங்க
- இப்போ
தேவையில்லாம
ஏன் நான் ஏங்க
முழுதாகிப்
போகும் முன்னே - இப்போ
பழுதாகிப்
போகப் போறன்
அழிகியே
நான் போயும் - அம்மாவின்
அழுகைய
நிறுத்தப் போறன்
No comments:
Post a Comment