நெஞ்செல்லாம்
அதுதானே
நெனைப்பெல்லாம்
அதுதானே
அஞ்சாறு
வயசினிலே - என்
கனவெல்லாம்
அதுதானே
கப்பலும்
அதுதானே
கார் வண்டியும் அதுதானே
அப்பாவின்
மிதிவண்டி - எனக்கு
அரசன் வரும் தேர் தானே
உக்காந்து
நானும் வர
அப்பாவும்
அத ஓட்டி வர
மரமெல்லாம்
ஓடி வரும் - அது
எங்க வண்டியப் பார்க்க வரும்
தெருவெல்லாம்
இருக்கும் பள்ளம்
சில நேரம் துள்ள வைக்கும்
தெரு மூல பெல்லுச் சத்தம்
தேவலோகம்
கேட்டு நிக்கும்
இறக்கத்தில்
போகும் போது
வேகமா காத்தடிக்கும்
ஓட்டியது
அப்பாதான் - ஆனா
என் மேனி புல்லரிக்கும்
முள்ளுக்குத்திச்
சில நேரம்
காத்தெல்லாம்
போயிருக்கும்
மூச்சடங்கிப்
போனது போல் - அது
என் கண்ணில் நீரிறைக்கும்
சாமத்துக்
கோயிலுக்கு
சடங்குக்கு
நாங்க போனா
சாமி கூடத் திரும்பிப் பார்க்கும்
- அது
சடங்குக்கு
டைனமோ வெளிச்சம் கேக்கும்
காசில்லாக்
காலத்திலே
நான் ஏறிப் போன வண்டி
கார் வந்த பின்னும் கூட
- எனக்கு
அது தானே ஆச வண்டி
No comments:
Post a Comment