ஈழப் பழம் தேடும் குருவிகள்
- அவைகள்
இரும்பால்
உடல் கொண்ட குருவிகள்
ஊனக் குணம் கொண்ட உள்ளத்தால்
- தமிழனை
உணவாய்ப்
புசித்துண்ட குருவிகள்
அவைகளே
அவர்களின் நச்சுக் குருவிகள்
வானக் கடல் நீந்தி வந்தவை
- தம்
வாலில்
நஞ்சோடு வந்தவை
வானில்
இறகுகள் உதிரவிட்டு - அதனால்
வாழைப்
பிஞ்சுகளைக் கொன்றவை
இன்னும்
வாழாப் பிஞ்சுகளைக் கொன்றவை
அவைகளே
அவர்களின் நச்சுக் குருவிகள்
No comments:
Post a Comment