இரவில்
தோன்றும் கர்ப்பிணி - அவள்
ஈர் ஏழு நாள் வரை
கர்ப்பிணி
இலட்சம்
கோடிமுறை கருத்தரித்தும் - இன்னும்
பிரசவம்
காணாத கர்ப்பிணி
அவளே வளர்மதி என்னும் கர்ப்பிணி
வளர்கரு
வளர்ந்த பூரணத்தில்
வளைகாப்பு
வைபவம் பூரணையாம்
வளைகாப்பு
கடந்த மறு நாளே
வளர்ந்தது
கருவல்ல மாயத் தோரணையாம்
No comments:
Post a Comment