கூர்விழியால் குறுவாள் எறிவாள்
குறுவாள் குடைவால் என் மார் நுழைவாள்
மார் நுழை வாயிலைத் தாழிடுவாள்
தாழிடத் தாழிடத் த(ன்)னைத் திறப்பாள்
கார்குழல் கலைவதை அனுமதிப்பாள்
தேர்வடமாய் அதில் எனை இழுப்பாள்
ஈருடல் திரித்துக் கயிறெடுத்து
இறுக்கமாய் இரவுகள் கட்டி வைப்பாள்
வானதி வான்நதி தோய்ந்திடுவாள்
வான் நதி வளைவிடை ஆய்ந்திடுவாள்
வர்மத்தின் வாழ்கலை வாய் பிணைந்து
வர்மனின் கர்வத்தின் சாறெடுப்பாள்
வெண்ணிறப் புரவியில் வந்திலே னெனை
பொன்னிறப் புரவியாய்த் தன் தனம் சுமப்பாள்
பொன்னியின் செல்வனாய் அல்லே னெனை
கன்னியின் கள்வனாய்க் கைதுசெய்வாள்
Keep it up da
ReplyDeleteநன்றி நண்பா
Delete