ஓலைக் கூரையின் விரிசல் வழி தெரியும்
நீல வானம் பார்த்து நான் கண் விழித்து
சேலைத் தலைப்பினால் பெற்றவளிடம்
குளித்து வந்த என் தலையைத் துவட்டி முடித்து
இன்றோ நாளையோ என இறக்கத் துடிக்கும்
என் பள்ளிச் சட்டையின்
பதினோராவது கிழிசலையும்
பக்குவமாய் அவள் பிணைத்துத்
தர
என்றோ ஓர் நாள் இந்த ஏழ்மை மாறும் என
எண்ணிக் கொண்டே அதை உடுத்திக் கொண்டு
போய் வருகிறேன் அம்மா எனச் சொல்லும் போதே
மூலையில் கிடக்கும் கிழிந்த புத்தகப்
பையைப்
பார்க்கும் என் கண்களைக் கண்டித்துக் கொண்டே
முழங்கை மடித்து நெஞ்சோடணைத்த
புத்தகச் சுமையையும்
மூன்று வருடங்களாய் தந்தையை இழந்த
என் தங்கையின் கனவையும்
முறையே அங்ஙனம் அடுக்கிக்
கொண்டே
முற்றத்தில் முன்னேறி
பசியோடு தெருவை அடைகையில்
சாப்பிட்டுப் போ மகனே என்ற
சாவித்திரியவளின் சாந்தக் குரல்
என் செவியில் விழும் போது
உள்ளுக்குள்ளே எண்ணிக் கொள்வேன்
காலையில் நான் உண்ணவென
கடைசி இரவில் நீ உண்ணாது
எனக்காக நீரூற்றி வைத்த அந்தப் பழஞ் சோற்றை
நீ உண்டு உன் பசியை ஆற்றிக்கொள்
தாயே என்று...
எனக்கு மட்டும் தெரிந்த வலிகள்
ReplyDeleteஅருமை
நன்றி
Deleteமிக அருமையான கவிதை
ReplyDeleteநன்றி
Delete"நான் மட்டும் அறிந்த இரகசியம் " மிகவும் அருமை .
ReplyDeleteஉங்களது எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரரே உங்கள் ஆதரவுக்கு
Delete