பல யுத்தம் கண்ட பூமியிதில்
- பலர்
இரத்தம்
சிந்திய போர் முனையில்
படுகொலையென்ற
வார்த்தைக்கு - ஏன்
மரங்களின்
அழிப்பு விதிவிலக்கு?
எத்தனை
மரங்கள் அழித்திருப்போம் - அட
எத்தனை
கிளைகள் சிதைத்திருப்போம்
வலிகள்
சொல்லத் தெரிந்திருந்தால் - அதன்
உரத்த அழுகுரல் கேட்டிருப்போம்
வாழ்க்கை
என்பது தமக்கு மட்டும் - என
வகுத்து
வைத்த மனித குலம்
வார்த்தை
பேசத் தெரிந்திருப்பின் - மரம்
வாய்த்த
வரமென ஏற்றிருக்கும்
நகரம் தோன்ற விருட்ஷங்களை - இயந்திர
அசுரன்
கொண்டு நாம் மடித்தோம்
நகரம் எங்கு நாம் படைத்தோம்
- வெப்ப
நரகம் தானே வடிவமைத்தோம்
விண் சிந்தும் துளி நீரேனும் - மரம்
கடைந்த
அமுதமென மறந்துவிட்டோம்
வன் துருவப் பனியை நீராக்கி
- மரத்தின்
அழிவால்
கடல் வளர்த்துவிட்டோம்
காக்கும்
ஓசோன் படையரங்கில் - பல
கதவுகளை
நாம் திறந்துவிட்டோம்
நுழையும்
வேண்டா ஒளிக்கீற்றால் - பாசக்
கயிற்றுடன்
எமனை வரவேற்றோம்
வாழும்
வரை நாம் வாழ்ந்து விட்டு
- உயிர்
சுகமாய்ப்
போக்க நினைக்கின்றோம்
ஆயுள் முடிந்து நாம் செல்லுமிடம் - மரித்த
மரங்களும்
இருக்கும் மறக்கின்றோம்
இத்தனை
வரிகள் படித்த பின்னே - உன்
மனது வலிகள் ஏற்றிருந்தால்
இன்றே விதைக்கு நீருற்று - நீ
நாளைய விருட்ஷம் உருவாக்கு
மிக அழகான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDelete