பால் நிலவு கண்டேன் - அது
பகலில்
வரக் கண்டேன்
பாதையோரப்
புற்கள் - அவள்
பாதம் வேண்டக் கண்டன்
கோயில்
வந்த அவளை - மனதில்
கோலம் போட்டுக் கொண்டேன்
கோவைப்
பழத்தில் இதழை - நான்
கோடி முறை வியந்து நின்றேன்
காதில்
சிமிக்கிகள் ஆடும் - என்
சிமிட்டாக்
கண் அதைத் தேடும்
காலில்
முள் தைத்த போதும் - அது
காளான்
பஞ்சாய் மாறும்
அவள் பின்னே நடக்கும் போது
- எனக்கு
வெயிலிலும்
கம்பளி வேண்டும்
அவள் சற்றே திரும்பும் நொடியில்
- என்
இதயச் சந்தம் ஓங்கும்
அவளது காற்றில் கரையும் பேச்சை - எந்தன்
கண்கள்
மட்டும் காணும்
அதை விலை கொடுத்து வாங்க
- அந்த
இந்திரன்
படையும் ஏங்கும்
காற்றில்
உதிரும் இலைகள் - எமக்காய்
அர்ச்சதை
என்றே தோன்றும்
காதல் தந்த அழகின் - திருப்
பெயரேனும்
அறிய வேண்டும்
No comments:
Post a Comment