கருவுதித்து உருவுடுத்து
பிறர் போலே பிறப்பெடுத்து
ஒரு பெயரை அணிவித்து
ஒரு(ஆண்)வன் என
அறிவித்து
உண்டு மகிழ்ந்து
கண்டு களிந்து
உண்டென்ற
தனைத்தும்
அடைய நினைந்து
மற்றவரும்
உற்றவரும்
கற்றதையே
நானும் கற்று
பெற்றவரும்
பெறுபவரும்
பெறுவதைத்தான்
நானும் பெற்று
அற்ப சுகம் சொற்ப சுகம்
அத்தனையும்
அனுபவித்து
எள்ளளவும்
எவர்க்குமிங்கு
ஏது பல-னற்றழிந்து
மாள்வதுவே
எந்தனதும்
வாழ்வென்று
ஊழ் கொண்டால்
அதற்கெதற்கு
இப்பிறவி
தமிழன்
என்ற தனிப்பிறவி
நன்றி
ReplyDelete