பொழுது
பட்டுப் போயாச்சி
பொற நிலவும் வந்தாச்சி
விறகெடுத்து
வந்த ஆச்சி
விளக்கு
வைக்கும் நேரமாச்சி
கோழி கூடு சேர்ந்தாச்சி
கொம்பு
மாடும் வந்தாச்சி
கோமளவள்ளி
என் குடிசையில
கோப்பத்
தயிரும் புளிச்சாச்சி
காள மாடு வண்டில் கட்டி
காடு வெட்டப் போன மச்சான்
நீ மட்டும் ஏன் வரல்ல
உன் நினைப்புக் கூட நேரம் தவறவில்ல
சமைஞ்ச
நாளு முதல் இருந்து
உன்ன மட்டும் நினைச்சிருக்கன்
அமைஞ்ச
முகூத்த நாளு வரும்
ஆச அணைக்க நேரம் வரும்
அந்திபடும்
வேளையில
செஞ்சிவப்பு
வானத்துல
கொஞ்சிப்
போகும் மேகம் போல
நாளும்
உன் வண்டில் போகும் வாசலால
காடு வெட்டி நீ வரவே
காத்திருப்பன்
கால் கடுக்க
கச்சான்
காத்தும் சாட்சி சொல்லும்
ஆனா மச்சான் நீ என்னப்
பாத்ததில்ல
வண்டில்
நிறைய கம்பு போகும்
வக வகையா அலம்பல் போகும்
கடந்து
நீ போறப்ப என் குடிசைய
ஓடுற மாட்ட மனம் விரட்டிப்
போகும்
காளி கோயில் சூலம் போல
முறுக்கு
மீச வச்சவரே
காலில்
முள்ளுக் குத்துமையா
கையத் தாரன் செருப்பாப் போடு
பரட்ட முடி வாரி விட
பத்து விரல் எனக்கிருக்கு
குறட்ட
விட்டுத் தூங்கினாலும்
குழலிசைதான்
அது எனக்கு
அழுக்கு
வேட்டி கட்டிக்கிட்டு
அரை உடம்புக்குச் சட்டை போட்டு
அரசன் போல நடக்கும் மச்சான்
அரைச்சாண்
இடம் கொடு மனசுக்குள்ள
சீதனமா
நான் கொடுக்க
சில்லறைகள்
சேர்த்ததில்ல
சேர்த்ததெல்லாம்
ஒண்டே ஒண்டு
நீ கிள்ளிப் போட்ட வெத்தலக் காம்பு
குத்துயிராக்
காத்திருக்கன்
குப்பி
விளக்கு வெளிச்சத்துல
எங்கு தான் போனீரோ
ஏனிந்தத்
தாமதமோ
தனியாகப்
போன மச்சான்
வழி மாறிப் போனீரோ
திசை கண்டு வந்தாலும்
பசியேறி
வருவீரோ
ஆஹா! மணிச் சத்தம் கேக்குதம்மா
மாட்டு
வண்டி கட கடக்குதம்மா
புயலொண்டு
கடக்குமுண்ணு
பூ மனசு சொல்லுதம்மா
No comments:
Post a Comment