செத்தைக் குடிசையால் வீடு கட்டி - பழஞ்
சேலையினால்
ஒரு தொட்டில் கட்டி
தாலாட்டும்
தாயெங்கே மெட்டுக் கட்டி - இன்று
தாலாட்டுப்
பாடுவது பாட்டுப் பெட்டி
அன்பெல்லாம்
கன்னத்தில் அள்ளிக்கொட்டி - முறை
ஆறேழு முத்தத்தால் நெற்றி முட்டி
தாலாட்டும்
தாயெங்கே மெட்டுக் கட்டி - இன்று
தாலாட்டுப்
பாடுவது பாட்டுப் பெட்டி
ஆராரோ பாடிட நேரமில்ல - குழந்தைக்கு
யாராரோ
தாய் தந்தை தெரிவதில்ல
அடித்தாரைச்
சொல்லியழக் கேட்பதில்ல - இன்று
அழுதாலும்
அரவணைக்க நாதியில்ல
தாலாட்டுக் கேட்பது
போல் வரமும் இல்ல - அது
தாளத்தின்
தாயென்றால் தவறும் இல்ல
புலம்புகின்ற
புதுப் பாடல் புனிதம் அல்ல
- இது
புரியாத தாய்களுக்கு எதை நான் சொல்ல?
புரியாத தாய்களுக்கு எதை நான் சொல்ல?
No comments:
Post a Comment