என் பிறப்புப் பதிவேட்டின்
பிற்குறிப்பினில்
எழுதப்பட்டிருந்தது போலும்;
நான் இறக்கும் போது இணைந்தே இறந்திட
இருவர்
இங்கு வருவர் என்று
தீயாய்
ஜனனித்த எனக்கு
தீபம் என்ற தீட்சைப் புகழ்
இல்லையெனினும்
தீயவன்
என்ற தீட்டுப் பெயராவது
இல்லாமல்
இருந்திருக்கலாம்
தீ-அவன் தீயவன் ஆனேன்
மாயவன்
நோயவனை
நேயவன்;
என் தாயவன்
மானுடனிற்களிக்கும்
பணி செய்ததனால்
சுவாலையாய்
சுவாசிக்கத் துவங்கினேன் - பிறர்
சுவாசம்
நாசம் செய்யும்
தோசம் தோய்ந்த வாசம் வீசும்
புகை நகைத்திடும் வகை இலையிலே
புகையிலை
புகைகயில் மிகைந்து எரிந்தேன்
அதை விரைந்து எரித்து
நானும்
விரைந்து மறைந்து விடலாம் என்று;
புகையிலையின்
நாற்றம் கொள்ளாமல்
பாவம் அந்த புகையிலையும்
அதைத்தான்
எண்ணியது போலும்;
மானுட உயிரின் நாற்றம் கொள்ளாமல்
நாங்கள்
மூவரும் தயாராகி விட்டோம்
என் பிறப்பு பதிவேட்டின்
பிற்குறிப்பினை
நிறைவேற்றிட
No comments:
Post a Comment